மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை!


மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை!


அ.தி.மு.க., -அசோக்குமார்: எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவு திட்டத்தால், உயர்ந்த நிலைக்கு பல லட்சம் பேர் வந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் ஆடு, மாடு மேய்த்தவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ்., - -ஐ.பி.எஸ்., ஆகியுள்ளனர்.

 

சபாநாயகர் அப்பாவு: அதற்கு முன் காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அதற்கு முன் நீதிக்கட்சி காலத்தில், சென்னை மாநகராட்சியில் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.

 

அசோக்குமார்: ஜெயலலிதா இலவச நோட்டு, புத்தகம், பேனா, லேப்டாப், சைக்கிள், காலணி போன்றவற்றை வழங்கினார். இதனால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்கள் 51.4 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இதில், பெண்கள் 51 சதவீதமும்; ஆண்கள் 51.8 சதவீதமும் உயர்கல்வி படிக்கின்றனர். இப்போது, மாணவியருக்கு 1,000 ரூபாய் தருவதாக அறிவித்து உள்ளீர்கள். இதுபோன்ற திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இருந்தது ஜெயலலிதா அரசு செயல்படுத்திய திட்டங்கள் தான்.

 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: நீங்கள் சொல்லும் கணக்கு 100 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே, கணக்கை சரியாக சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments

Popular posts from this blog