‘இந்த இந்திய வீரர்’…அசால்ட்டா 110 சதங்களை அடிப்பார்: அவரப் போய் குறைசொல்றீங்களே…அக்தர் அதிருப்தி! இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த இரண்டு வருடங்களாக சதமே அடிக்கவில்லை. மேலும், ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அனைத்து விதமான கேப்டன் பதவிகளிலும் இருந்து கோலி விலகியுள்ளார். இந்நிலையில் கோலியன் ஆட்டம் குறித்து, பலரும் பலவிதமாக விமர்சித்து பேசி வருகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அக்தர் பேட்டி: அதில், “விராட் கோலிக்கு மரியாதை கொடுங்கள். உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் அடுத்த தலைமுறை கேட்கிறது. ஒரு பாகிஸ்தான் நாட்டு வீரராக சொல்கிறேன், கோலிதான் மிகச்சிறந்தவர். அவர் எந்த கவலையும் இன்றி 45 வயதுவரை விளையாட வேண்டும்” எனக் கூறினார். மேலும் பேசிய அவர், “விராட் கோலி 110 சதங்களை அடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவரால் நிச்சயம் முடியும். விராட் கோலி குறித்து திராவிட் போன்றவர்களே விமர்சித்து ட்வீட் போடுகிறார்கள். தீபாவளி வாழ்த்துகளை கோல...
‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி! களிமண் தரையில் நடைபெறும் ஒரேயொரு கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபனர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் காலியிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும் 13 முறை சாம்பியனான நடாலும் மோதினர். இவரும் சமபலம் படைத்தவர்கள் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. 3 தோல்விகள்தான்: பிரெஞ்சு ஓபன் தொடரில் நடால் 110 வெற்றிகளை சந்தித்துள்ள நிலையில், 3 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளார். கடந்த ஆண்டில் நடைபெற்ற இத்தொடரின் அரையிறுதியில் நடால், ஜோகோவிச்சிடம் வீழ்த்தார். இதனைத் தொடர்ந்து ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறியதால் நடால் அவரை சாடியிருந்தார். இதனால், இவருக்கும் இடையில் சிறு பிரச்சினை இருந்தது. பரபரப்பான ஆட்டம்: இதனால், இருவருக்கும் இடையில் ஆட்டம் அனல் பறக்கும் என கருதப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டில் 6-2 என்ற கணக்கில் நடால் வெற்றிபெற்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்ட...
Comments
Post a Comment