சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!!585763215


சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்!! வலியில் துடித்த பரிதாபம்!!


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது... தெருநாய்க்கடிக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்... இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பிய போது ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா பக்கங்களிலும் கடித்துக் குதறியது... தற்போது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெஞ்சைப் பதற வைக்கும் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog