‘எப்படி தோத்தது கொல்கத்தா?’…மூன்று முக்கிய காரணங்கள்: பட்லருக்கு இத பண்ணிருக்க கூடாது! ஐபிஎல் 15ஆவது சீசனின் 30ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 103 (61) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அடுத்து தேவ்தத் படிக்கல் 24 (18), சஞ்சு சாம்சன் 38 (19), ஹெட்மையர் 26 (13) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை சேர்த்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 217/5 ரன்களை குவித்தது. கொல்கத்தா இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச் 58 (28), ஷ்ரேயஸ் ஐயர் 85 (51), உமேஷ் யாதவ் 21 (9) ஆகியோர் காட்டடி அடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் சேர்த்ததால், கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 210/10 ரன்களை மட்டும் சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்ததற்கு மூன்று காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.